படம் : இரட்டை வால் குருவி.
இசை : இளையராஜா.
குரல் : கே.ஜே.ஜேசுதாஸ்
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே
(ராஜ ராஜ சோழன் நான்...)
கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை நீட்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி
(ராஜ ராஜ சோழன் நான்...)
கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
முந்தாணை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தல்லாடுமே பொன் மேனி கேளாய் ராணி
(ராஜ ராஜ சோழன் நான்...)
5 இசை மழையில் நனைந்தவர்கள்:
ஆஹா சூப்பர் பாட்டு
சத்தியமா பின்னனிபாடகர்களில் ஒரு ராஜ ராஜன் கானக்கந்தர்வன்.
சத்தியமா பின்னனிபாடகர்களில் ஒரு ராஜ ராஜன் கானக்கந்தர்வன்.
//
இதுல சந்தேகமே இல்லை!
//கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை நீட்டும் போது பாயும் மின்சாரமே//
ரசிக்க வைக்கும் வரிகள்
//கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
//
இந்தப் பாடலில் எல்லா வரிகளுமே பிடிக்கும் என்றாலும் மனதில் நின்றது இன்றுவரை இந்த வரிகள்தான்.
இந்தப் பாடல் முழுவதுமே ரெம்ப பிடிக்கும்
காட்சி
இசை
கவி வரிகள்
பாடகர் குரல்
என எல்லாமே ரெம்ப அற்புதமாக வந்த பாடல்.
ரெம்பநாளாக தேடிக்கொண்டிருந்த பாடல்
இதை டவுன்லோடு செய்து வைத்துக்கொள்கிறேன்.
Post a Comment