நீ பாதி நான் பாதி கண்ணே...!



படம் : கேளடி கண்மணி
இசை : இளையராஜா
குரல் : K.J.ஜேசுதாஸ் & உமா ரமணன்

நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே


நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே


மானப்பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
கானப்பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவப்பாடல்
மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த
பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும் உன்னாலே


மெல்ல சிரிக்கும் உன் முத்துநகை
ரத்தினத்தை அள்ளித்தெளிக்கும் முன்னாலே
மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது


நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணா
நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே


இடது விழியில் தூசி விழுந்தால்
வலது விழியும் கலங்கி விடுமே
இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்
சோகம் எதற்கு என் பொன்னுலகம்
பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா


இந்த மனம்தான் என் மன்னவனும் வந்து உலவும்
நந்தவனம் தான் அன்பே வா
சுமையானது ஒரு சுகமானது சுவை நீ தான்


நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே


நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவை...!



படம்: நீதிக்கு தலைவணங்கு
இசை: M.S.விஸ்வநாதன்
பாடியவர்: K.J.ஜேசுதாஸ்



இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத்
தொட்டிலில் கட்டிவைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன் அன்னச்சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட


(இந்த பச்சைக்கிளிக்கொரு....)


எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட


(இந்த பச்சைக்கிளிக்கொரு....)


தூக்க மருந்தினை போன்றவரை பெற்றவர்
போற்றும் புகழுறைகள்
நோய் தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர்
கூறும் அறிவுரைகள்


(இந்த பச்சைக்கிளிக்கொரு....)


ஆறு கரை அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலாம்
தினம் நல்ல நெறிக்கண்டு பிள்ளை வளர்ந்திடில்
நாடும் நலம் பெறலாம்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட


(இந்த பச்சைக்கிளிக்கொரு....)


பாதை தவறிய கால்கள் விரும்பிய
ஊர் சென்று சேர்வதில்லை
நல்ல பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவள்
பேர் சொல்லி வாழ்வதில்லை


(இந்த பச்சைக்கிளிக்கொரு....)


நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு...!



படம்: ஈரமான ரோஜாவே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ், S.ஜானகி



தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு
தனிமை கொதிக்குது நினைவினில் அனலும் அடிக்குது
இதயம் துடிக்குது துணை வரத்தான்

(தென்றல் காற்றே..)

மேடையேற கூடுமோ மீண்டும் நமது நாடகம்
நானும் நீயும் சேர்வதால் யாருக்கென்ன பாதகம்
யாரைச் சொல்லி நோவது காலம் செய்த கோலம்
உன்னை என்னை வாட்டுது காதல் செய்த பாவம்
கண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே
என்ன செய்வது சொல்லடி முல்லையே
கனவில் மட்டுமே கைகள் சேரலாம் கண்ணா

(தென்றல் காற்றே..)

ஜீவன் ரெண்டும் சேர்ந்தது தேவன் வகுத்த சாசனம்
காதல் எந்த நாளிலும் கவிதை போல சாஸ்வதம்
என்று வந்த நேசமோ பூர்வ ஜென்ம யோகம்
இன்னும் ஏழு ஜென்மமும் வளரும் இந்த யாகம்
மீண்டும் மீண்டும் பூமியில் தோன்றலாம்
காதல் ஓவியம் பார்வையில் தீட்டலாம்
பிரிவு என்பதே உறவுக்காகத்தான் கண்ணே

(தென்றல் காற்றே..)

ஹரிவராசனம் சுவாமி விஸ்வமோஹனம்

சபரிமலையில் நடைசாத்தும்பொழுது பாடப்படும்
பாடல். மெய்மறக்க வைக்கும் குரலில் மனதை
இதப்படுத்தும் பாடல் உங்களுக்காக






பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்...


Get Your Own Hindi Songs Player at Music Plugin


ஹே ஹே ஹோ ஹோ ல்லா லா லா
ஹே ஹே ஹோ ஹோ ல்லா லா லா
ஓ ஓ ஓ ஓ ஓ

பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நான் தான் அதன் ராகம் தாளம் கேட்டேன்
தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்.

தூரத்தில் போகின்ற மேகங்களே
தூரல்கள் போடுங்கள் பூமியிலே
வேர்கொண்ட பூஞ்சோலை நீர்கொண்டு ஆட
ஏரியில் மீன் கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை தாருங்களே
ஊர்விட்டு ஊர் சென்று காவியம் பாட..

பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே...

(பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்)

பந்தங்கள் யாவும் தொடர்கதைப்போல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளாய்
நூழிலைப் போல் இங்கு பாலுடன்
நெய்யென கலந்திடும் நாள்..

தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்ததுதிங்கே
மண்னில் இதைவிட சொர்க்கம் எங்கே

நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை.
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை.
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திகழ்த்திட


பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நான் தான் அதன் ராகம் தாளம் கேட்டேன்
தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்.

பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்...
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்.

கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத...!


Get Your Own Hindi Songs Player at Music Plugin




படம்: பால நாகம்மா
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ் & S.P.ஷைலஜா
இசை: இளையராஜா


கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத
கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத
குறுநகை அமைத்தது இலக்கிய மேடை
கருவிழி வரைந்தது மன்மத ஜாடை
கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத

ஆ ஆ...ஆ ஆ...ஆஆஆ...ஆ ஆ...ஆஆஆ ஆஆஆ

செவ்வாழைக் கால்கள் சிங்கார தூண்கள்
செவ்வாழைக் கால்கள் சிங்கார தூண்கள்
நடந்தால் இடையொரு நடனம்...
நடந்தால் இடையொரு நடனம்
மேல்பாதிதனை பார்க்க ஒரு நூறு நாளாகும்
முடியலங்காரம் அடியை அளந்துவரும் கொடியென ஆடும்

கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத

தம்தனம்தனம்தனம் தம்தனம்தனம்தனம்
தம்தம்தனம் தனம்தனம் தம்தனம்தனம்தனம்
தம்தம்தம்தனம் தம்தம்தம்தனம் தம்தம்தம்
தனம்தம்தம்தம்தனம்

தங்கமேனி சிற்பசித்திரம்...ஆ ஆ ஆ
தங்கமேனி சிற்பசித்திரம் தத்தை பேச்சு முத்து ரத்தினம்

தம்த னம்தனம் தம்த னம்தனம்

தங்கமேனி சிற்பசித்திரம் தத்தை பேச்சு முத்து ரத்தினம்
அங்கமொன்று காதல் மண்டபம் அங்கு பேசும் இன்பமந்திரம்

தம்த னம்தனம் தம்த னம்தனம்

அங்கமொன்று காதல் மண்டபம் அங்கு பேசும் இன்பமந்திரம்
கோடி மலரில் இவள் குமுதம்...தன னன
சுவைகூடும் நகையில் இவள் அமுதம்...தன னன னன
கோடி மலரில் இவள் குமுதம்...தன னன
சுவைகூடும் நகையில் இவள் அமுதம்...தன னன னன
கலசம் குலுங்கும் இளமயில் கவிஞன் மயங்கும்
கலைமயில் வீணைமேனிதனில் பின்குடங்கள் என
அசைந்து வரும் அணைக்க வரும் புது நிலவோ

கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத
குறுநகை அமைத்தது இலக்கிய மேடை
கருவிழி வரைந்தது மன்மத ஜாடை
கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத

ஆடல் கலையே தேவன் தந்தது....


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஆடல் கலையே தேவன் தந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது...
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது.
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் தந்தது......

மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்
மெல்லிசையின் ஓசைபோல் மெல்லச் சிரித்தாள்
மல்லிகையே வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்
மெல்லிசையின் ஓசைபோல் மெல்லச் சிரித்தாள்

வண்ண வண்ண மேலாடை ஆஆஆ
வண்ண வண்ண மேலாடை புணைந்தாடும் பைங்கிளி
மான் கூட்டம் மயங்க தாவித் தாவி தான் வந்தாள்.
வண்ண வண்ண மேலாடை புணைந்தாடும் பைங்கிளி
மான் கூட்டம் மயங்க தாவித் தாவி தான் வந்தாள்.

ஆடல் கலையே தேவன் தந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது...
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது.
தேவன் தந்தது தேவன் தந்தது

சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும்
சிற்றிடைதான் கண்பறிக்கும் மின் கொடியோ,
சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும்
சிற்றிடைதான் கண்பறிக்கும் மின் கொடியோ,

விண்ணிலே வாழ்ந்திருக்கும் வெந்நிற நிலா
பெண்ணென காலெடுத்து வந்ததோ உலா..
முன்னழகும் பின்னழகும் பொன்னழகோ
முள்ளிருக்கும் கள்ளிருக்கும் பூவழகோ

தலைசிறந்த கலைவிளங்க நடம்
புரியும் பதுமையோ - புதுமையோ
சதங்கைகள் தழுவிய பதங்களில்
பலவித ஜதி ஸ்வரம் வருமோ!!

குரல் வழி வரும் அனிமொழி ஒரு சரச பாஷையோ
சுரங்களில் புது சுகங்களைத் தரும் சாருகேசியோ!!!
ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ரி
க ம ம தக திமி ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ப தா
நி ரி ஸா கா மா கா ரி க ரி ஸ ம ரி தா
நி ரி ச நி தா ப ஸா நி த ப

தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்

ஆடல் கலையே தேவன் தந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது...
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது.
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் தந்தது.... தேவன் தந்தது....




படம்: ஸ்ரீராகவேந்திரா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
இசை: இளையராஜா

Sunayana sunayana ...Aa in nazaaron ko tum dekho





Aa in nazaaron ko tum dekho
Aur main tumhe dekhte hue dekhoon
Aa in .......


Pyari hain phoolon ki pankhudiyan
Par teri palkon se pyari kahan.
Phoolon ki khushboo se ki dosti
Par teri rangon se yaari kahan.
Sunayana - aa khilen phoolon ko tum dekho
Aur main tumhe dekhte hue dekhoon

Unche mahal ke Jharokhon se tum
Amber ki shobha niharon zara
Rangon se rangon ka ye mel jo
Aankhon se man mein utaaro zara

Sunayana sunayana ...
Door asmaanon ko tum dekho
O.. door asmaanno ko
Aur main bas tumhe dekhte hue dekhoon

Lo Din dhala raat hone lagi
Taaron ki duniya mein kho jao tum
Main jaag kar tum ko dekha karoon
So jaao tum thoda so jaao tum
Sunayana ....... Sunayana
Aa mere sapnon ko tum dekho
Aur main tumhe dekhte hue dekhoon
Main bas tumhe dekhte hue dekhoon.

FILM: SUNAYANA
SINGER: K.J.YESUDAS

கலைவாணியே. உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்..

கானக்கந்தர்வனில் 100வது பாடல் பதிவாக
இந்த்ப்பாடல்




கலைவாணியே... கலைவாணியே...
உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்..
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைத்தே அழுதேன் இசை தரும் கலைவாணியே...
உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்..
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைத்தே அழுதேன் இசை தரும் கலைவாணியே...

சுரம் பாடி சிரித்தாய் சிரிப்பாலே எரித்தாய்
மடிமீது மரித்தேன் மறுஜென்மம் கொடுத்தாய்
சிறு விரல்களில் தலைகோதி மடிதனில் எனை வளர்த்தாய்
இசை எனும் வரம் வரும் நேரம் திசை சொல்லவில்லை மறந்தாய்
முகம் காட்ட மறுத்தாய்.. ஆ....
முகம் காட்ட மறுத்தாய்.. முகவரியை மறைத்தாய்
நீ முன் வந்து பூச்சிந்து விழித்துளிகள்
தெரிக்கிறது துடைத்துவிடு.. கலைவாணியே..


உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்..
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைத்தே அழுதேன் இசை தரும் கலைவாணியே...

உள்ளம் அழுதது உன்னை தொழுதது உனது உயிரில் இவன் பாதி
கங்கை தலையினில் மங்கை இடையினில் சிவனும் இவனும் ஒரு ஜாதி
ராமன் ஒருவகை கண்ணன் ஒருவகை இரண்டும் உலகில் சமநீதி
அங்கே திருமகள் இங்கே கலைமகள் அவளும் இவளும் சரிபாதி
க்ண்ணீர் பெருகியதே... ஆ....
கண்ணீர் பெருகிய கண்ணில் உன்முகம் அழகிய நிலவென மிதக்கும்
உயிரே உயிரின் உயிரே அழகே அழகின் அழகே
இனி அழ வலுவில்லை விழிகளில் துளியில்லை
இனியொரு பிரிவில்லை துயர் வர வழியில்லை.. வருவாய்..

படம் : சிந்து பைரவி
இசை : இளையராஜா
பாடியவர் : KJ ஜேசுதாஸ்

ஆராரிரோ பாடியதாரோ? தூங்கிப்போனதாரோ யாரோ யாரோ


Get Your Own Hindi Songs Player at Music Plugin


ஆராரிரோ பாடியதாரோ?
தூங்கிப்போனதாரோ
யாரோ யாரோ......


என் தாயோ யாரோ
என் தெய்வமே இது பொய்த்தூக்கமா??
நான் தூங்கவே இனி நாளாகுமா?


நீ முந்திப்போனது நியாயம் இல்லையே
நான் முந்திப்போகவே யோகம் இல்லையே
கூட்டை விட்டுத் தாய்க்கிளி பறந்தது எங்கே
பசித்தவன் கேட்கிறேன் பால்சோறு எங்கே
என் தேவியே நான் செய்த குற்றம் என்ன கூறு?
ஒரு பார்வை பாரு..

ஆராரிரோ பாடியதாரோ?
தூங்கிப்போனதாரோ
யாரோ யாரோ.....
என் தாயோ யாரோ


பொழுதாகிப்போனதே இன்னும் தூக்கமா?
சொல்லாமல் போவது தாயே நியாயமா?
உயிர்த்தந்த தேவிக்கு உயிர் இல்லையோ
பால் ஊத்திப் பாத்தியே பால் ஊத்தலாமோ
அன்னம் போட்ட என் தாயே உனக்கு
அரிசி போட வந்தேன் எனை நானே நொந்தேன்.

ஆராரிரோ பாடியதாரோ?
தூங்கிப்போனதாரோ
யாரோ யாரோ.....
என் தாயோ யாரோ

என் தெய்வமே இது பொய்த்தூக்கமா??
நான் தூங்கவே இனி நாளாகுமா?


ஆராரிரோ பாடியதாரோ?
தூங்கிப்போனதாரோ
யாரோ யாரோ.....
என் தாயோ யாரோ