ஓ நெஞ்சமே என் பாடலை



அழகான குரல்களில் அமைதியான பாடல்.

படம்: பாசக்கனல்
நடிகர்: நிழல்கள் ரவி
இசை:எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடலாசிரியர்:எஸ்.ஏ.ராஜ்குமார்
வருடம்:1989



ஓ நெஞ்சமே என் பாடலை நான் பாடுவேன்
கேள் கொஞ்சமே

ஓ நெஞ்சமே என் பாடலை நான் பாடுவேன்
கேள் கொஞ்சமே
இதயத்தை எங்கோ சிறையிலிட்டேனே
தனிமைக்கு என்னை விலைக்கொடுத்தேனே
என்னை மறந்தேனே

ஓ நெஞ்சமே என் பாடலை நான் பாடுவேன்
கேள் கொஞ்சமே

கைகோர்த்து நான் சென்ற காலங்கள்
மெய்யன்பின் மாறாத தின்னங்கள்
நீ கொண்ட வேறான என்னங்கள்
நிஜமென்றல் பெண்மைக்கு துக்கங்கள்

அறியாத பருவம் அல்ல எனது அன்பு கொண்டு
புரியாத பெண்மை உன்னை நான் என்ன சொல்வது

அன்பு கொண்டு பேசினால்
ஆசையென்று ஆகுமா
ஆண்களூக்கு ஆயிரம்
அர்த்தம் அது கூடுமா?

காலங்களின் கோலம் இது

ஓ நெஞ்சமே என் பாடலை நான் பாடுவேன்
கேள் கொஞ்சமே

கனவோடு என் காதல் தீயாச்சு
கதை போல என் வாழ்வும் வீணாச்சு
விதை போட மரம் வேறு உண்டாச்சு
உயிர் கூடு புயல் வந்து பாழாச்சு

விதையென்ற கேள்வி ஒன்றை
ஏன்  நீ கேட்க வேண்டுமா
விளையாட்டு தோழன் உன்னை
என் மனம் ஏற்க வேண்டுமா

காத்திருந்த ஆண் கிளி
நேற்று தூங்கிப் போனது
பார்த்திருந்த வென் புறா
கைப் பிடித்து சென்றது

போதும் விடு போராட்டமே

ஓ நெஞ்சமே என் பாடலை நான் பாடுவேன்
கேள் கொஞ்சமே
இதயத்தை எங்கோ சிறையிலிட்டேனே
தனிமைக்கு என்னை விலைக்கொடுத்தேனே
என்னை மறந்தேனே

பத்மஸ்ரீ டாக்டர் கே.ஜே.யேசுதாசின் அவர்களின் க்ளாசிக் வாரம்







பத்மஸ்ரீ டாக்டர் கே.ஜே.யேசுதாசின் அவர்களின் க்ளாசிக் வாரம் வானொலி தொகுப்பை  அறிவிப்பாளர் திரு.ராஜ்குமார் மிகவும் அழகாக தொகுத்து வழங்கியுள்ளார். தாஸண்ணாவின் அருமை பெருமைகளை அனைவரும் தெரிந்திருந்த தகவல்கள் தான். இருந்தாலும் அவருடன் பணியாற்றிய போது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை சுவைபட சொல்லுகிறார்கள் அவரின் அபிமான நட்சத்திரங்களான டைரக்டர் திரு.பாசில், பாடகி ஜென்சி, அவர் புதல்வர் திரு.விஜய் யேசுதாஸ் ஆகியோர். நான்கு ஒலித்தொகுப்புகள் அனைத்தும் அருமையான பாடல் பொக்கிஷம் கேளூங்கள் அன்பர்களே. உஙக்ளூக்காக இதோ...






1.இன்று சொர்ர்கத்தின் திறப்பு விழா
2.நீலநயனங்க்ளில் ஒரு நீண்ட கனவு
3.தங்கத்தில் முகம் எடுத்து
4.அழகெனும் ஓவியம் இங்கே
5.தங்கத்தோனியிலே தவளும்
6.நெஞ்சத்தை அள்ளிக்கொஞ்சம்
7.திருமாளின் திருமார்ப்பில்
8.கங்கைநதி ஓரம் ராமன்
9.வானம் எனும் வீதியிலே
10.நாளை உலகை ஆளவேண்டும்





1010 KJJ-1

1.என்ன பார்வை உந்தன் பார்வை
2.கங்கை யமுனை இங்குதான்
3.ஸ்ரீதேவி என் வாழ்வில்
4.நல்ல மனம் வாழ்க
5.தீர்த்தகரைதனிலே சென்பக புஷ்பங்களே
6.என்ன சுகம் என்ன சுகம்
7.ஆகாயம் மேலே பாதாளம் கீழே
8.நினைவாலே சிலை செய்து
9.உன்னிடம் மயங்குகிறேன்





1011 KJJ-2

1.மீன் கொடி தேரில்
2.மனைவி அமைவதெல்லாம்
3.உறவுகள் தொடர்கதை
4.பூவிழி வாசலில் யாரடி வந்தது
5.ஏரிக்கரை பூங்காற்றே
6.வேதம் நீ இனிய நாதம் நீ
7.கிண்ணத்தில் தேன் வடித்து
8.கன்னன்  ஒரு கைகுழந்தை
9.செந்தாழம் பூவில் வந்தாடும்





1012 KJJ-3

1.ஏதோ நினைவுகள் கனவுகள்
2.என் இனிய பொன் நிலாவே
3.பொன்னான மேனி உல்லாசம்
4.கனவென்னும் ஆலைக்குள்
5.நிலை மாறும் உலகில்
6.மாலை பொன்னான மாலை
7.பூபாளம் இசைக்கும்
8.மூக்குத்தி பூமேலே
9.வெச்சப்பார்வை தீராதடி
10.காக்கை சிறகினிலே நந்தலாலா

நன்றி: பாசப்பறவைகள் தளம்

வண்ண மொழி மானே




 
படம்: சேதுபதி ஐ.பி.எஸ்
நடிகர்: விஜயகாந்த், மீனா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
வருடம்:1994






வண்ண மொழி மானே வெள்ளி மீனே பசுந்தேனே
என்னுடைய பேரும் கொண்ட சீரும் உன்னைச் சேரும்
வெற்றி எனும் மாலை ஒரு காலை பெரும் வேளை
பக்க பலம் பெண் தான் எனக்கூறும் தமிழ் மண் தான்
முன்ணனியில் விளங்க இங்கு நீ வேண்டும்
பின்ணணியில் துளங்கும் சக்தி நீயாகும்

வண்ண மொழி மானே வெள்ளி மீனே பசுந்தேனே
வண்ண மொழி மானே வெள்ளி மீனே

ஓஹோ ஓஹோ ஓஹோ..ஓஹோ ஓஹோ ஓஹோ
கஸ்தூரி என்றொரு குலப் பெண் தானம்மா
கணவன் காந்தி புகழ் பேர வைத்தாள்
நாகம்மை என்றொரு தமிழ் பெண் தானம்மா
தந்தை பெரியார் பெருமையை காத்தாள்
நாவீரன் நேருவின் ஆதாரம் தான்
அஞ்சாத மனைவியின் அன்பு மனம் தான்
கமலா நேரு அவள் பேர் தானம்மா
புகழ்ந்தே பேசும் இந்த ஊர் தானம்மா
அதுபோல் எனக்கு நீதான் ஆதாரம்

வண்ண மொழி மானே வெள்ளி மீனே பசுந்தேனே
வண்ண மொழி மானே வெள்ளி மீனே

கண்ணே உன் நாயகன் காவல் துறையிலே
கடமை உணர்ந்து உழைத்திடும் போது
ஊராரை காத்திடும் உயர்ந்த பணியிலே
இரவோ பகலோ உறக்கம் ஏது
காற்றோடு இடி மழை வந்தாலுமே
காப்பாற்ற போவது எங்கள் இனமே
காவல் காரன் தோளில் சுலபம் அல்ல
வார்த்தை ஏது இதன் புனிதம் சொல்ல
ஒரு நாள் எனைத்தான் தேசம் பாராட்டும்


வண்ண மொழி மானே வெள்ளி மீனே பசுந்தேனே
என்னுடைய பேரும் கொண்ட சீரும் உன்னை சேரும்
வெற்றி எனும் மாலை ஒரு காலை பெரும் வேளை
பக்க பலம் பெண் தான் எனக்கூறும் தமிழ் மண் தான்
முன்ண்னியில் விளங்க இங்கு நீ வேண்டும்
பின்ணணியில் துளங்கும் சக்தி நீயாகும்


வண்ண மொழி மானே வெள்ளி மீனே பசுந்தேனே
வண்ண மொழி மானே வெள்ளி மீனே

பாடலை இங்கே பதிவிறக்கம் செய்தும் கேட்கலாம்.

ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை



//வரி போடாத அரசாங்கம் இல்ல .. பழி போடாத ஒரு பொண்ணும் இல்ல ..
கண்ணுக்குள்ள சுமந்தேன் .. ஒரு சொல்லுக்குத்தான் துடிச்சேன்//

இனிமையான சோகப்பாடல் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.


படம்: மக்கள் ஆணையிட்டால்
நடிகர்கள்:விஜயகந்த், ரேகா
இசை:எஸ்.ஆ.ராஜ்குமார்
இயக்குநர்: ராம நாராயணன்.

ரொம்ப நாள் கழித்து தாஸண்ணாவின் குடிகாரன் பாட்டு சில மெட்டுக்களுடன்
இது போன்ற பாடல்கள் மிகவும் அருமையாக பாடியிருப்பார். ரொம்ப ரசிச்ச பாடல்
நீங்களூம் கேட்டு மகிழுங்கள்.

படம்: மக்கள் ஆணையிட்டால்
பாடியவர்: டாக்டர்.கே.ஜே. யேசுதாஸ்.

ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை ராஜானாக இருந்தேன்
ராகம் இல்ல தாளம் இல்ல ரானும் பாட்டு படிச்சேன்
பாவப்பட்ட கண்மணியே பழியை தானே சுமந்தேன்

ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை ராஜானாக இருந்தேன் ஹ்ஹ

பஞ்சுப்பொதி பக்கத்தில தீயும் இருக்கு
அது பத்தவில்ல பாசம் எனும் ஈரம் இருக்கு
நெஞ்சுக்குள்ள இன்னும் கூட நேசம் இருக்கு
என்னை வஞ்சம்ன்னு தள்ள என்ன நியாயம் இருக்கு
வரி போடாத அரசாங்கம் இல்ல
பழி போடாத ஒரு பொண்ணும் இல்ல

வரி போடாத அரசாங்கம் இல்ல
பழி போடாத ஒரு பொண்ணும் இல்ல
கண்ணுக்குள்ள சுமந்தேன்
ஒரு சொல்லுக்குத்தான் துடிச்சேன்

ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை ராஜானாக இருந்தேன்
ராகம் இல்ல தாளம் இல்ல ரானும் பாட்டு படிச்சேன்

சொத்துக்காக பரமேசன் மண்ணை சுமந்தான்
ஏசு தத்துவத்தை காப்பாத்த சிலுவை சுமந்தான்
பத்து மாசம் என் தாயும் என்னை சுமந்தாள்
நான் பட்ட கடன் தீரவில்லை உன்னை சுமந்தேன்
என் தேகம் எனக்கு பாரமில்லை
உன் சந்தேகம் எனக்கு தாளவில்லை

என் தேகம் எனக்கு பாரமில்லை
உன் சந்தேகம் எனக்கு தாளவில்லை
துண்பத்துக்கும் சிரிச்சேன்
அடி அன்புக்குதான் அழுதேன்

ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை ராஜானாக இருந்தேன்
ராகம் இல்ல.... தாளம் இல்ல ரானும் பாட்டு படிச்சேன்
பாவப்பட்ட கண்மணியே பழியை தானே சுமந்தேன்.


ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை ராஜானாக இருந்தேன் பாடல் இங்கே

வாழ்த்துக்கள் கானக்கந்தர்வனே!!

கானக்கந்தர்வன் பாடகனாக அவதாரம் எடுத்து இன்றோடு 50 வருடங்கள் முடிகின்றன.
யேசுதாஸ் அவர்கள் தாய் மொழி மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு,
கன்னட,பெங்காலி, உருது, ஹிந்தி, ஒரியா,குஜராத்தி, துலு, ரஷ்ய மற்றும் மராத்தி
மொழியில் இதுவரைக்கும் 50,000 பாடல்கள் பாடியிருக்கிறார்.

கடந்த 5 தசாப்தங்களாக தனது மயக்கும் குரலால் நம்மை மனதுக்கு
இதமளித்து வரும் இந்நந்நாளில் அவருக்கு கானக்கந்தர்வன் வலைப்பூவின்
சார்பில் வாழ்த்துக்கள். பத்மபூஷன் போன்ற பல விருதுகளையும்,
சிறந்த பாடகருக்காக பல மாநில விருதுகளையும் பெற்றிருக்கிறார்.





மானிட சேவை துரோகமா???

இன்று பத்மஸ்ரீ கமலஹாசன் பிறந்தநாள். உன்னால் முடியும் தம்பி
படத்தில் யேசுதாஸ் அவர்கள் பாடிய இந்த அருமையான பாடல்
கமலஹாசன் பிறந்தநாள் சிறப்பு பதிவாக வெளிவருகிறது.

ஒரு அருமையான கர்னாடக கச்சேரி போன்றே தனி ஆவர்தனம்
என கலக்கல் பாட்டு இது.



மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்

வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா.......
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா.
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா.
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா.

மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா... ஆஆஆ

வீதி வீணைகளில் தந்தி சிந்தும்
இசை மனமுருகும்

நாத வீணையில் தினம் கேட்டு கேட்டு
நான் அழுதேன்.



படம்: உன்னால் முடியும் தம்பி
பாடியவர் : யேசுதாஸ்
இசை: இளையராஜா

அடி கானக்கருங்குயிலே.....



மாப்பிள்ளை நல்ல புள்ள ஆமா.. ஆமா..ஆமா

மணப்பொண்ணு சின்னப்பொண்ணூ
மனம் போல் இணைஞ்சது மாலையும் விழுந்தது
கனவும் பலிச்சது கல்யாணம் முடிஞ்சது

தானத்தந்தர தான

ஆடி கானக்கருங்குயிலே
கச்சேரி வைக்கப்போறேன்
ஒண்னக் கணக்காக சேத்து
வெச்சு கைராசி பாக்கப்போறேன்
இனி மனசெல்லாம் மத்தாப்பு
போல மலராக தூவுமம்மா
இனி வருங்காலம் துன்பங்கள்
நீங்கி மலர் மாலை போடுமம்மா

ஆடி கானக்கருங்குயிலே
கச்சேரி வைக்கப்போறேன்
ஒண்னக் கணக்காக சேத்து
வெச்சு கைராசி பாக்கப்போறேன்

ஜாதி ஆண்ஜாதி இவ உன் பொண்ஜாதி
இனிமே வேறேதும் ஜாதி இல்ல
பாதி உன் பாதி மானம் மருவாதி
நாளும் காப்பாத்தும் கன்னிப்புள்ள
சொன்னதைக்கேளு மன்னவன் தோளு
இன்பத்தை காட்டும் பாருபுள்ள
சிந்திச்சுப்பாத்து சொந்தத்தைச் சேத்து
பெத்துக்க வேணும் முத்துப்புள்ள

நீதான் இல்லாது நேரம் செல்லாது
சேரு எப்போதும் வீட்டுக்குள்ள
பாலும் நல்லால்ல பழமும் நல்லால்ல
பசிக்கும் ஏதோ ஏக்கதுல
அடி- பரிமாறு மச்சானைப்பாத்து
பாய்போட்ட கூட்டுக்குள்ள

ஆடி கானக்கருங்குயிலே
கச்சேரி வைக்கப்போறேன்
ஒண்னக் கணக்காக சேத்து
வெச்சு கைராசி பாக்கப்போறேன்

இனி மனசெல்லாம் மத்தாப்பு
போல மலராக தூவுமம்மா
இனி வருங்காலம் துன்பங்கள்
நீங்கி மலர் மாலை போடுமம்மா

பாசம் அன்போட பழகும் பண்போட
நாளும் நீ எந்தன் நெஞ்சுக்குள்ள
காதல் கல்யாணம் கலந்த பின்னால
கண்ணே இனிஉந்தன் கண்ணுக்குள்ள

சந்தனம் போல குங்குமம் போல
சங்கமம் ஆகும் ராசாக்கண்ணு
வந்தது வேள தந்தது மால
கேட்டது யாரு சின்னப்பொண்ணு
இனிமே ரண்டல்ல இதயம் ஒண்னாச்சு
இரவும் பகல் எல்லாம் இன்பமுண்டு
நினைச்சா நெஞ்சல்லாம் நெரஞ்சு பொங்காதோ
நெதமும் சுகமுண்டு சொர்கமுண்டு
ஒரு இலைபோட்டு போடாத சோறு
எடுத்துண்ணும் நேரம் இன்று

ஆடி கானக்கருங்குயிலே
கச்சேரி வைக்கப்போறேன்
ஒண்னக் கணக்காக சேத்து
வெச்சு கைராசி பாக்கப்போறேன்

இனி மனசெல்லாம் மத்தாப்பு
போல மலராக தூவுமம்மா
இனி வருங்காலம் துன்பங்கள்
நீங்கி மலர் மாலை போடுமம்மா

ஆடி கானக்கருங்குயிலே கச்சேரி
வைக்கப்போறேன்
ஒண்னக் கணக்காக சேத்து வெச்சு
கைராசி பாக்கப்போறேன்


படம்:பூந்தோட்ட காவல்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்