வினை தீர்க்கும் நாயகனே வினை தீர்க்கும் நாயகனே




வினை தீர்க்கும் நாயகனே
வினை தீர்க்கும் நாயகனே
வணங்கித் துதிப்பேன் விநாயகனே
வினை தீர்க்கும் நாயகனே
வணங்கித் துதிப்பேன் விநாயகனே

வித்வம் அளிப்பவனே!விக்னம் அழிப்பவனே!!
விஜயம் கொடுப்பவனே நீயே விக்னேஸ்வரனே
வினை தீர்க்கும் நாயகனே
வினை தீர்க்கும் நாயகனே என்றும் நீயே
வினை தீர்க்கும் நாயகனே என்றும் நீயே!!!!

கஸ்தூரி மஞ்சள் உமையாளின் கைபட்டு
உருப்பெற்று உயிர் பெற்று கணபதியானாய்
உலகின் அதிபதியானாய்
நீயோ தாய் காத்த தனயன் உன்
தலை கொய்த பரமன் கஜராஜன் தலைவைத்த
கஜபதியானாய் உலகின் அதிபதியானாய்

உனை நாடும் பக்தர்க்கு உன் கர்ப்பகிரஹம்
உள்ளே அமர்ந்துள்ள நீயே சொர்க்கம்
எப்பூஜைக்கும் நீ அகரம் உனக்குத் தோப்புக்கரணம்
நான் போட நல் வாழ்வு அருளனும்

வினை தீர்க்கும் நாயகனே
வணங்கித் துதிப்பேன் விநாயகனே
வினை தீர்க்கும் நாயகனே......

வானாக மண்ணாக நீராக காற்றாக
நெருப்பாக உருவான கணநாயக -பஞ்சமுக நாயக
நீ என் ஊனாக உணர்வாக உடலாக உயிராக
உறவோடு உறவான குணதாயக - பிரணவ அருள்நாயக
பிறப்பே இல்லானே எடுத்துக்கொள்ளு
இப்பிறப்பில் தான் முக்தியை கொடுத்தருளு
உன் தும்பிக்கை என் அபயம்
என் வாழ்க்கை உன் உபயம்
நான் உன்னை பாட பக்தி உதயம்

வினை தீர்க்கும் நாயகனே
வணங்கித் துதிப்பேன் விநாயகனே
வினை தீர்க்கும் நாயகனே
வணங்கித் துதிப்பேன் விநாயகனே

வித்வம் அளிப்பவனே!விக்னம் அழிப்பவனே!!
விஜயம் கொடுப்பவனே நீயே விக்னேஸ்வரனே
வினை தீர்க்கும் நாயகனே
வினை தீர்க்கும் நாயகனே என்றும் நீயே
வினை தீர்க்கும் நாயகனே என்றும் நீயே!!!!

பாடியவர் : யேசுதாஸ்
பாடல் இசை: கங்கை அமரன்

Yesudas English Song Ahimsa Ahimsa Ahinsa





கானகந்தர்வன் குரலில் அருமையான ஆங்கிலப்பாடல்.
இசையின் அடுத்த பரிமாணமாக இசையையே மொழியாக கொண்ட கந்தர்வனுக்கு
இந்த பதிவு சம்பர்ப்பணம்.


படம்: காந்தி
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

Latin song by Dr.K.J.Yesudas



super hit telugu song



பூ பூத்ததை யார் பார்த்தது காதல் கூட பூவை போன்றது



பூ பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது
மனதிலே உள்ளது மொளனமே நல்லது
வானம் வேறு நீலம் வேறு யார் சொன்னது.

பூ பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது

சபலம் வந்து சேர்ந்த காதல் சாபமானது
அவலம் வந்து சேர்ந்த காதல் ஆழமானது
பருவம் வந்த போது காதல் நியாயமானது
பண்பு பார்த்து வந்த காதல் தூய்மையானது
அழகு என்பது மெழுகை போன்றது
அன்பு என்பது விளக்கைப்போன்றது
அன்பு கொண்ட உள்ளம் என்றும் மாறாதது.....

பூ பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது

பறவைப்போல பறந்த வானில் பறந்து செல்கின்றோம்
பசியைக்கூட இரண்டு பேரும் பகிர்ந்து கொள்கிறோம்
உறக்கம் நம்மை பிரிப்பதில்லை தூங்கிக்கொள்கிறோம்
ஒருவர் கண்ணில் ஒருவர் மூடிக்கொள்கிறோம்

மழையில் காய்கிறோம் வெயிலில் நனைகிறோம்
மழலை பேசியே மடியில் சாய்கிறோம்
இன்னும் கொஞ்சம் எல்லை மீற நாள் பார்க்கிறோம்

பூ பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது
மனதிலே உள்ளது மொளனமே நல்லது
வானம் வேறு நீலம் வேறு யார் சொன்னது.

பூ பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது.......

படம்: கதாநாயகன்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
இசை: சந்திரபோஸ்

முத்தமிழ்க் கவியே வருக.....முக்கனி சுவையே வருக





முத்தமிழ்க் கவியே வருக
முக்கனி சுவையே வருக
முத்தமிழ்க் கவியே வருக
முக்கனி சுவையே வருக
காதல் எனும் தீவினிலே
காலங்கள் நாம் வாழ நாள் வந்தது

முத்தமிழ்க் கலையே வருக
முக்கனி சுவையும் தருக
காதல் எனும் தீவினிலே
காலங்கல் நாம் வாழ நாள் வந்தது
முத்தமிழ் கலையே வருக
முக்கனிச் சுவையும் தருக.. ஓஓ


காதல் தேவன் மார்பில் ஆடும் பூமாலை நான்
காவல் கொண்ட மன்னன் நெஞ்சில் நான் ஆடுவேன்
கண்கள் மீது ஜாடை நூறு நான் பார்க்கிறேன்
கவிதை நூறு தானே வந்து நான் பாடினேன்

மூடாத தோட்டத்தில் ரோஜாக்கள் ஆட
தேனோடு நீ ஆட ஓடோடி வா
காணாத சொர்க்கங்கள் நான் காணத் தானே
பூந்தென்றல் தேர் ஏறி நீ ஓடி வா
காலங்கள் நேரங்கள் நம் சொந்தம்
இன்பம் கோடி ஆஆ

ஆஆ... முத்தமிழ் கலையே வருக
முக்கனிச்சுவையும் தருக

சங்கம் கொள்ளும் தமிழ் காதல் சிந்து
கொஞ்சம் கெஞ்சும் வண்ணம் ஒரு ராகம் சிந்து
நெஞ்சம் எந்தன் மஞ்சம் அதில் அன்பை தந்து
தந்தோம் தந்தோம் என்று புது தாளம் சிந்து
வார்த்தைக்குள் அடங்காத ரசமான சரசம்
நான் ஆட ஒரு மேடை நீ கொண்டு வா
என்றைக்கும் விளங்காத பல கோடி இன்பம்
யாருக்கும் தெரியாமல் நீ சொல்ல வா

காலங்கள் நேரங்கள் நம் சொந்தம்
இன்பம் கோடி ஆ..ஆ

முத்தமிழ் கவியே வருக முக்கனிச் சுவையே வருக
காதலென்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ
நாள் வந்தது
முத்தமிழ் கவியே வருக முக்கனிச் சுவையே வருக
முத்தமிழ் கலையே வருக முக்கனிச் சுவையும் தருக ஓ ஓ ஓ
படம்: தர்மத்தின் தலைவன்

இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ், சித்ரா

DARI CHOOPINA DEVATHA I CHEYEI ENNADU VEEDAKA....



దారి చూపిన దేవతా
dAri chUpina dEvatA I chEyi ennaDu vIDakA (2)
janma janmaku tODugA nA dAnivai nuvvu naDichirA
dAri chUpina dEvatA I chEyi ennaDu vIDakA

manasulEni Silanu nEnu nuvvu chUsina ninnalO
mamata telisi manishinaiti challani nI chEtilO
kannu terichina vELalO nIkEmi sEvanu chEtunu
dAri chUpina dEvatA I chEyi ennaDu vIDakA

marapu rAdu mAsipOdu nEnu chEsina drOhamu
kalana kUDa maruvanammA nuvvu chUpina tyAgamu
prEma nErpina pennidhi A prEma ninu dIvinchani
dAri chUpina dEvatA I chEyi ennaDu vIDakA
janma janmaku tODugA nA dAnivai nuvvu naDichirA
dAri chUpina dEvatA I chEyi ennaDu vIDakA

படம்: கிருஹப்ரவேசம்,

பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

வானமழைப்போலே புதுப்பாடல்கள்..... கானமழை தூவும் முகில் ஆடல்கள்.



ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்

வானமழைப்போலே புதுப்பாடல்கள்
கானமழை தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடுநாள் வாழும் இது

வானமழைப்போலே புதுப்பாடல்கள்
கானமழை தூவும் முகில் ஆடல்கள்...

இதயம் ராத்திரியில் இசையால் அமைதி பெரும்
இருக்கும் காயமெல்லாம் இசையால் ஆறிவிடும்
கொதிக்கும் பாறையிலும் இசையால் பூ மலரும்
இரும்பு பாறையிலும் இசையால் நீர் கசியும்
பழிவாங்கும் பகை நெஞ்சம் இசையால் சாந்தி பெறும்

வானமழைப்போலே புதுப்பாடல்கள்
கானமழை தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடுநாள் வாழும் இது

குரலில் தேன்குழைத்து குயிலைப் படைத்தவர் யார்?
மனத்தை மெல்லிசையால் இழுத்தே வைத்தவர் யார்?
அலையில் பாட்டெடுப்பேன் அரங்கம் தேவையில்லை
சபையில் பேரெடுக்க குயில்கள் இசை எடுப்பதில்லை
எனக்கே நான் சுகம் சேர்க்க தினமும் நான் பாடுகின்றேன்

வானமழைப்போலே புதுப்பாடல்கள்
கானமழை தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடுநாள் வாழும் இது



படம்: இது நம்ம பூமி,
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

வேதம் நீ..இனிய நாதம் நீ





வேதம் நீ..இனிய நாதம் நீ (2)
நிலவு நீ கதிரும் நீ..அடிமை நான் தினமும் ஓதும்
வேதம் நீ..இனிய நாதம் நீ (2)
நிலவு நீ கதிரும் நீ..அடிமை நான் தினமும் ஓதும்
வேதம் நீ..இனிய நாதம் நீ (2)


கருணை மேவும் பூவிழிப்பார்வையில்
கவிதை இன்பம் காட்டுகிறாய் (2)
இளைய தென்றல் காற்றினிலே..ஏ...
இளைய தென்றல் காற்றினிலே
இனிய சந்தப் பாட்டினிலே
இளைய தென்றல் காற்றினிலே
இனிய சந்தப் பாட்டினிலே
எதிலும் உந்தன் நாதங்களே
நினைத்த பொருள் தரும் நிரந்தர சுகம் தரும்

(வேதம் நீ..)

அண்டம் பகிரண்டம் உனை அண்டும் படி வந்தாய் (2)
தண்டை ஒலி ஜதி தருமோ கமல பாதம் சதிரிடுமோ(2)
மனமும் விழியும் தினமும் எழுதும் அழகே
மலையும் கடலும் நதியும் அறியும் வடிவே
நெஞ்சம் இது தஞ்சம் என உனைத் தினம் நினைத்தது
நித்தம் ஒரு புத்தம் புது இசைத் தமிழ் வடித்தது
ஒருமுறை தரிசனமும் தருக இசையில் உனது இதயம் இசையும்
மனம் குணம் அறிந்தவள்
குழலது சரியுது சரியுது
குறுநகை விரியுது விரியுது
விழிக்கருணை மழை அதில் நனைய வரும் ஒரு மனம் பரவும்

(வேதம் நீ..)

படம்: கோயில்புறா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
இசை: இளையராஜா