வெண்ணிலாவின் தேரில் ஏறி...




வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே!!

மானமுள்ள ஊமைபோல
நானும் கேட்க கூசி நின்றேனே!


நிறம்கண்டு முகம்கண்டு நேசம் கொண்டேன்
அவள் நிழல்கண்டு நிழல்கண்டு நான் பாசம் கொண்டேன்
வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல்தெய்வம் நேரில் வந்தாளே!


அட கைநீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே....
அட கைநீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே....
நிறம்கண்டு முகம்கண்டு நேசம் கொண்டேன்
அவள் நிழல்கண்டு நிழல்கண்டே நான் பாசம் கொண்டேன்.
வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல்தெய்வம் நேரில் வந்தாளே!



காலழகும் மேலழகு கண்கொண்டுக் கண்டேன்
அவள் நூல் அறியும் இடை அழகும் நோகாமல் தின்பேன்
கத்தி மூக்கில் காதல் நெஞ்சைகாயம் செய்து மாயம் செய்தாளே

அட கைநீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே....

அவள் சிக்கெடுக்கும் கூந்தல் சீப்பாக இருப்பேன்
இல்லை செந்தாமரை பாதத்தில் செருப்பாக பிறப்பேன்
அண்டமெல்லாம் விண்டு போகும் கொண்ட காதல்
கொள்கை மாறாது.

அட கைநீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே....




பாடலின் எம்பீ3 வடிவுக்கு

படம்: டூயட் (1994)

இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடல் வரி: வைரமுத்து
பாடியவர் : கே.ஜே.யேசுதாஸ்