மனதில் உறுதி வேண்டும்....வார்த்தையிலே தெளிவும் வேண்டும்

Get this widget | Track details | eSnips Social DNA



மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளி படைத்த பார்வை வேண்டும்
ஞான தீபம் ஏற்ற வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்.....

இடை வரும் பலவித தடைகளை தகர்த்திங்கு வாழ்ந்து காட்ட வேண்டும்
இலக்கிய பெண்ணுக்கு இலக்கணம் நீயென யாரும் போற்றவேண்டும்
மாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம்
மானம் காக்கும் மாந்தர் யாருக்கும் மாலை வாங்கி போடுவோம்
ஏசினாலும் பேசினாலும் அஞ்சிடாமல் வாழ வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்.....

சமைக்கின்ற கரமிங்கு சரித்திரம் படைப்பதை பூமி பார்க்க வேண்டும்
தூரத்து தேசத்தில் பாரத பெண்மையின் பாடு கேட்கவேண்டும்
பெண்கள் கூட்டம் பேய்கள் என்று சொன்ன சித்தர்களும்
ஈன்ற தாயும் பெண்மையென்று எண்ணிடாத பித்தர்களே
வீடு ஆளும் பெண்மையிங்கு நாடு ஆளும் காலம் வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்.....

படம்: மனதில் உறுதி வேண்டும் (1987)

பாரதியார் பாடலுக்கு இசை அமைத்தது இளையராஜா.

குரல் கொடுத்தது : கே.ஜே.யேசுதாஸ்

ரவிவர்மன் எழுதாத கலையோ!!!!

Get this widget | Track details | eSnips Social DNA



ல லாலலலால லலா

ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதிதேவி வடிவான சிலையோ
கவிராஜன் எழுதாத கவியோ...
கரை போட்டு நடக்காத நதியோ

ஓ ஓ ஓ ஓ ஓ ம்ம் ம்ம்
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதிதேவி வடிவான சிலையோ ஓ ஓ ஓ....

விழியோர சிறுபார்வை போதும்
நான் விளையாடும் மைதானம் ஆகும்
இதழோர சிரிப்பொன்று போதும்
நான் இளைப்பாரும் மலர்ப்பந்தல் ஆகும்

கை ஏந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே
கருங்கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே

ஆ...ஆ...ஆ.....ஆ

ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதிதேவி வடிவான சிலையோ ஓ ஓ ஓ....

பூமாலையே உன்னை மணப்பேன்
புதுச்சேலை கசங்காமல் அணைப்பேன்

மகராணி போல் உனை மதிப்பேன்
உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்
என் மேனியில் இரண்டு துளிகள் விழும்
அது போதுமே ஜீவன் அமைதிக்கொள்ளும்
ஆ...ஆ...ஆ.....ஆ

ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதிதேவி வடிவான சிலையோ
கவிராஜன் எழுதாத கவியோ...
கரை போட்டு நடக்காத நதியோ

ஓ ஓ ஓ ஓ ஓ ம்ம் ம்ம்
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதிதேவி வடிவான சிலையோ ஓ ஓ ஓ....

படம் : வசந்தி(1988)
இசை: சந்திரபோஸ்

பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ்,

உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்






Get this widget | Track details | eSnips Social DNA

ஆ...ஆஅ...ஆ...ஆஆஆ.....ஆ..ஆஅ.
உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
ராகம் பல நூறு பாடும் தினம் தோறும்
காலம் நேரம் ஏதும் இல்லை.

உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்....

கண்ணில் மின்னும் காதல் ஜோதி
கன்னி மேனி மானின் ஜாதி
கண்கள் சொல்லும் காமன் சேதி
கண்டும் இன்னும் என்ன நாணம் மீதி

ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்
ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்

தொடவேண்டி கைகள் ஏங்கும்...
படவேண்டும் பார்வை எங்கும்

இந்தப் பார்வை ஒன்று போதும்...
போதும் -இடைவேளை மீதி இனி நாளை
மாலை வேளை வீணாய்ப்போகும்

இந்தப் பார்வை ஒன்று போதும்...


தயாரத்தய்ய தய்ய தயார தயாரதந்தம்

கண்னால் உன்னைக் கண்டால் போதும்
பன்னீர் பூக்கள் பந்தல் போடும்
மன்னா உன்னை மார்பில் தாங்கும்
பொன்னாள் கண்டே பெண்மை தூங்கும்

மடிமீது சாயும் சாபம்
தரவேண்டும் ஆயுள்காலம்....
மடிமீது சாயும் சாபம்
தரவேண்டும் ஆயுள்காலம்....

பலகோடி காலம் வாழ
பனித்தூவி வானம் வாழ்த்தும்

உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்....
ராகம் பல நூறு பாடும் தினம் தோறும்
காலம் நேரம் ஏதும் இல்லை.


படம் : உன்னை நான் சந்தித்தேன்.
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ், வாணிஜெயராம்

மலைச்சாரலில் இளம் பூங்குயில்

Get this widget | Track details | eSnips Social DNA

மலைச்சாரலில் இளம் பூங்குயில்
அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்
அது நானல்லவா... துணை நீயல்லவா!!!
அன்பு கீதம் நாம் பாடும் நாளல்லவா!!!

ஆ....ஆ....ஆ...ஓ...ஓ.ஓ

ஈரேழு ஜென்மத்தின் பந்தம் இது
ஒரு இழை கூட பிரியாத சொந்தம் இது
தெய்வீகம் பெண்ணாக நேர் வந்தது
எந்தன் திருவீதி வழித்தேடி தேர்வந்ததோ!!

தொடும் உறவானது... தொடர்கதையானது!!
இந்த நாதம் கலையாத இசையானது.

மலைச்சாரலில் இளம் பூங்குயில்
அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்
அது நானல்லவா... துணை நீயல்லவா!!!
அன்பு கீதம் நாம் பாடும் நாளல்லவா!!!

ஆ....ஆ....ஆ.....ஆ....
ல்ல ல்லா ல்ல்லால்லா

பனிதூங்கும் மலரே உன் மடி என்பது
இரு கனிதூங்கும் தேன் திராட்சை கொடி என்பது
நினைத்தாலும் அனைத்தாலும் கொதிக்கின்றது
அதில் நான் தேடும் இன்பங்கள் உதிக்கின்றது
விழி சிரிக்கின்றது.... கவி படிக்கின்றது
திருமேனி தாளாமல் நடிக்கின்றது

மலைச்சாரலில் இளம் பூங்குயில்
அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்
அது நானல்லவா... துணை நீயல்லவா!!!
அன்பு கீதம் நாம் பாடும் நாளல்லவா!!!

லலலாலலாலால்லாலா

படம் : ஒரு குடும்பத்தின் கதை
பாடியவர். கே.ஜே.யேசுதாஸ்
இசை: சங்கர் கணேஷ்

கொஞ்சும் குமாரி - ஆசை வந்த பின்னே



கொஞ்சும் குமாரி - ஆசை வந்த பின்னே

Get this widget | Track details | eSnips Social DNA

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ!!!



ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ!!!
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம்- உறங்காமல் வாடுதே....
சுகம் உறவாட தேடுதே .....
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது.

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ!!!
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ.....

மாலை நேரக் காற்றில்
அசைந்தாடும் தென்னங்கீற்றே
மாலை சூடி நாளும்
என ஆளும் தெய்வம் நீயே!!

காதல் தேவி எங்கே? தேடும் நெஞ்சம் அங்கே
தேரில் போகும் தேவதை,
நேரில் வந்த நேரமே
என் உள்ளம் இன்று வானில் போகுதே!!

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ!!!
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ.....

ஏதோ நூறு ஜென்மம் ஒன்று சேர்ந்து வந்த சொந்தம்
வாழும் காலம் யாவும் துணையாக வேண்டும் என்றும்

காலம் தந்த பந்தம், காதல் என்னும் கீதம்
ஜீவனாக கேட்குதே சேர்ந்து இன்பம் கூட்டுதே
வராத காலம் வந்து சேர்ந்ததே!

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ!!!
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம்- உறங்காமல் வாடுதே
சுகம் உறவாட தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது.

படம் :ஆனந்தராகம்
பாடியவர்கள்: யேசுதாஸ், ஜானகி
இசை: இளையராஜா