ஒரு எழை வெச்ச வாழை



மண்ணுக்கேத்த மைந்தன் படத்தில் தாஸண்ணா அவர்கள் பாடிய ஒரு செமி சோகப்பாட்டு ரொம்ப நாட்களாக என் கோப்பில் இருந்தது இன்று தான் இந்த தளத்தில் பதிய நேரம் கிடைத்தது. இனிமையான பாடல் கேட்டு மகிழுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA


படம்:மண்ணுக்கேத்த மைந்தன்
பாடியவர்: டாக்டர் கே.ஜே.யேசுதாஸ்
நடிகர்:ராமராஜன்
இசை:தேவா

ஒரு எழை வெச்ச வாழை அந்த வாழை வளரும் வேளை
ஒரு எழை வெச்ச வாழை அந்த வாழை வளரும் வேளை

ஒரு எழை வெச்ச வாழை அந்த வாழை வளரும் வேளை
ஒரு எழை வெச்ச வாழை அந்த வாழை வளரும் வேளை
அதை காலை ஒடித்தவன் கடவுள் என்பவன் கருணையில்லா கோழை
சொல்லடி கிளியே கிளியே சொன்னது தவறா கிளியே
சொல்லடி கிளியே கிளியே சொன்னது தவறா கிளியே
ஒரு எழை வெச்ச வாழை அந்த வாழை வளரும் வேளை

ஏழை குடிசையிலே ஈச்சம் பாய் கிழிச்சலிலே
தானா விளக்கெறிய கருப்பான மத்தியிலே
ரோசாப்பூ போல் பொறந்த என் ராசாத்தி கண்மணியே
கையசைக்கும் நந்தவனம் கண்ணு ரெண்டும் நட்சத்திரம்
உன் முகத்தில் சோகம் வந்தால் தாங்காதம்மா இந்த மனம்
அந்தரத்தில் குடியிருக்கும் ஆண்டவனை பார்த்தேனே
அந்த ஊரை கூட்டி வெச்சு நியாயத்தை நான் கேட்பேனே
விளையாடும் சிறு கலைமானே இதை விதி என்று சொல்வது சரிதானா
விடியாமல் வழக்கும் முடியாமல் அந்த இறைவனை சும்மா விடுவேனா

ஒரு எழை வெச்ச வாழை அந்த வாழை வளரும் வேளை

பூமி தான் நீ நடக்க புன்னியத்தை செய்யலையே
பொன் உதிரும் உன் சிரிப்பை பூக்களை நான் பார்க்கலையே
சிங்கார தேரைப்போலே நீ நடந்து காட்டனுமே
சின்ன குயில் காலகளுக்கு கின்கிணி?? நான் பூட்டனுமே
கலங்காதே மனம் வருந்தாதே வரும் காலம் நமது கேட்டுக்கும்மா
கட்டாயம் அடி உன் மாமன் சொன்னதை செய்வேன் பார்த்துக்கும்மா

ஒரு எழை வெச்ச வாழை அந்த வாழை வளரும் வேளை
அதை காலை ஒடித்தவன் கடவுள் என்பவன் கருணையில்லா கோழை
சொல்லடி கிளியே கிளியே சொன்னது தவறா கிளியே
சொல்லடி கிளியே கிளியே சொன்னது தவறா கிளியே
சொல்லடி கிளியே கிளியே சொன்னது தவறா கிளியே
சொல்லடி கிளியே கிளியே சொன்னது தவறா கிளியே

பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம்...!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

படம்: இளமைக்காலங்கள்
பாடியவர்கள்: K.J.யேசுதாஸ் & P.சுசீலா


பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம்
பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன் வேளை தள்ளாடும் பெண் மாலை
இளமை வயலில் அமுதமழை விழ

(பாட வந்ததோ)

ராஜமாலை தோள்சேரும் நாணமென்னும் தேனூறும்
ராஜமாலை தோள்சேரும் நாணமென்னும் தேனூறும்
கண்ணில் குளிர்காலம் நெஞ்சில் வெயில்காலம்
கண்ணில் குளிர்காலம் நெஞ்சில் வெயில்காலம்
அன்பே அன்பே என்னாளும் நானுந்தன் தோழி
பண்பாடி கண்மூடி
உனது மடியில் உறங்கும் ஒரு கிளி

(பாட வந்ததோ)

மூடிவைத்த பூந்தோப்பு காலம் யாவும் நீ காப்பு
மூடிவைத்த பூந்தோப்பு காலம் யாவும் நீ காப்பு
இதயம் உறங்காது இமைகள் இறங்காது
இதயம் உறங்காது இமைகள் இறங்காது
தேனே தேனே கங்கைக்கு ஏனிந்த தாகம்
உல்லாசம் உள்ளூறும்
நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்

(பாட வந்ததோ)

பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே...!




படம் : தீபம்
பாடியவர்: K.J.ஜேசுதாஸ் & S.ஜானகி



பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைக்குது எனையே

(பூவிழி வாசலில் யாரடி.....)

அரும்பான காதல் பூவானது
அனுபவ சுகங்களை தேடுது
நினைத்தாலும் நெஞ்சம் தேனானது
நெருங்கவும் மயங்கவும் ஓடுது
மோகம் வரும் ஒரு வேளையில்
நாணம் வரும் மறு வேளையில்
இரண்டும் போரடுதே
துடிக்கும் இளமை தடுக்கும் பெண்மை

(பூவிழி வாசலில் யாரடி.....)

இள மாலைத்தென்றல் தாலாட்டுது
இளமையின் கனவுகள் ஆடுது
மலை வாழை கால்கள் தள்ளாடுது
மரகத இலை திரை போடுது
கார்மேகமோ குழலானது
ஊர்கோலமாய் அது போகுது
நாளை கல்யாணமோ
எனக்கும் உனக்கும் பொருத்தம் தானே

(பூவிழி வாசலில் யாரடி.....)

கலைந்தாடும் கூந்தல் பாய் போடுமோ
கலை இது அறிமுகம் வேண்டுமா
அசைந்தாடும் கூந்தல் நாமாக
நவரச நினைவுகள் போதுமா
பூமேனியோ மலர் மாளிகை
பொன்மாலையில் ஒரு நாளிதே
நாளும் நான் ஆடவோ
அணைக்கும் துடிக்கும் சிலிர்க்கும் மேனி

(பூவிழி வாசலில் யாரடி.....)

அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது...!



படம்:நட்பு
பாடியவர்கள்:K.J.யேசுதாஸ் & S.ஜானகி



அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது
வானில் போன தேவதை வாழ்த்துச் சொன்னது
ஒரு தத்தை கடிதத்தைத் தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க

(அதிகாலை சுபவேளை......... )

அன்பே வா வா அணைக்கவா நீ நிலவுக்குப் பிறந்தவளா
போதை வண்டே பொறுத்திரு இன்று மலருக்குத் திறப்பு விழா
உன்னை வந்து பாராமல் தூக்கம் தொல்லையே
உன்னை வந்து பார்த்தாலும் தூக்கம் இல்லையே
ஒரு பாரம் உடை மீறும் நிறம் மாறும் தனியே
இதழோரம் அமுதூறும் பரிமாறும் இனியே
அடி தப்பிப்போகக் கூடாதே

(அதிகாலை சுபவேளை........ )

தென்றல் வந்து தீண்டினால் இந்ததளிர் என்ன தடை சொல்லுமா
பெண்மை பாரம் தாங்குமா அந்த இடை ஒரு விடை சொல்லுமா
என்னைச் சேர்ந்த உன்னுள்ளம் ஈரம் மாறுமா
தங்கம் என்ன சுட்டாலும் சாரம் போகுமா
இளங்கோதை ஒரு பேதை இவள் பாதை உனது
மலர்மாலை அணியாமல் உறங்காது மனது
இது போதும் சொர்க்கம் வேறேது

அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது
வானில் போன தேவதை வாழ்த்துச் சொன்னது
ஒரு தத்தை கடிதத்தைத் தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க

(அதிகாலை சுபவேளை.......)

சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே...!





படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.யேசுதாஸ் & சித்ரா


சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ
சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ
சங்கத்தமிழ் கவியே..


மாதுளம் பூவிருக்க அதற்குள் வாசனை தேனிருக்க
பாதியை நானெடுக்க மெதுவாய் மீதியை நீ கொடுக்க
காதலன் கண்ணுறங்க தலைவி கூந்தலில் பாய் விரிக்க
ஒருபுறம் நான் அணைக்க...ஆஆஆஆஆஆ
ஒருபுறம் நான் அணைக்க தழுவி மறுபுறம் நீ அணைக்க
சாத்திரம் மீறிய கீர்த்தனம் பாட சுகங்களில் லயிப்பவள் நான்
சங்கத்தமிழ் கவியே...சங்கத்தமிழ் கவியே


பூங்குயில் பேடைதனை சேரத்தான் ஆண்குயில் பாடியதோ
ஓடத்தை போல் நானும் ஆடத்தான் ஓடையும் வாடியதோ
காதலன் கை தொடத்தான்....காதலன் கை தொடத்தான்
இந்த கண்களும் தேடியதோ
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்
தோழியர் யாவரும் கேலிகள் பேச தினம்தினம் நான் தவித்தேன்


சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ
சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ
சங்கத்தமிழ் கவியே...