3. பொய்யின்றி மெய்யோடு....



பொய்யின்றி மெய்யோடு
நெய்கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம்.- சபரியில்
ஐயனை நீ காணலாம்.

(பொய்யின்றி மெய்யோடு)

ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா.
ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா.



அவனை நாடு
அவன் புகழ் பாடு
புகழோடு வாழவைப்பான் - ஐயப்பன்
உன்னை புகழோடு
வாழவைப்பான்- ஐயப்பன்

இருப்பது காடு
வணங்குது நாடு அவனைக்
காணத்தேவை - பண்பாடு
ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா.



பூஜைகள் போடு
தூய அன்போடு
பெயரோடு
வாழவைப்பான் ஐயப்பன் - நல்ல
பெயரோடு வாழவைப்பான் ஐயப்பன்.


அனைவரும் வாருங்கள்
ஐயனை நாடுங்கள்
அருள் வேண்டும்
அன்பரை எல்லாம்
வாழவைப்பான்.

அருள் வேண்டும்
அன்பரை எல்லாம்
வாழவைப்பான்

ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா.

பொய்யின்றி மெய்யோடு நெய்கொண்டுபோனால்
ஐயனை நீ காணலாம்- சபரியில்
ஐயனை நீ காணலாம்.


ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா.
சரணம் ஐயப்பா. சரணம்... ஐய்யப்பா..

1 இசை மழையில் நனைந்தவர்கள்:

Tamil Home Recipes said...

மிகவும் அருமை