கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத...!


Get Your Own Hindi Songs Player at Music Plugin




படம்: பால நாகம்மா
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ் & S.P.ஷைலஜா
இசை: இளையராஜா


கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத
கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத
குறுநகை அமைத்தது இலக்கிய மேடை
கருவிழி வரைந்தது மன்மத ஜாடை
கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத

ஆ ஆ...ஆ ஆ...ஆஆஆ...ஆ ஆ...ஆஆஆ ஆஆஆ

செவ்வாழைக் கால்கள் சிங்கார தூண்கள்
செவ்வாழைக் கால்கள் சிங்கார தூண்கள்
நடந்தால் இடையொரு நடனம்...
நடந்தால் இடையொரு நடனம்
மேல்பாதிதனை பார்க்க ஒரு நூறு நாளாகும்
முடியலங்காரம் அடியை அளந்துவரும் கொடியென ஆடும்

கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத

தம்தனம்தனம்தனம் தம்தனம்தனம்தனம்
தம்தம்தனம் தனம்தனம் தம்தனம்தனம்தனம்
தம்தம்தம்தனம் தம்தம்தம்தனம் தம்தம்தம்
தனம்தம்தம்தம்தனம்

தங்கமேனி சிற்பசித்திரம்...ஆ ஆ ஆ
தங்கமேனி சிற்பசித்திரம் தத்தை பேச்சு முத்து ரத்தினம்

தம்த னம்தனம் தம்த னம்தனம்

தங்கமேனி சிற்பசித்திரம் தத்தை பேச்சு முத்து ரத்தினம்
அங்கமொன்று காதல் மண்டபம் அங்கு பேசும் இன்பமந்திரம்

தம்த னம்தனம் தம்த னம்தனம்

அங்கமொன்று காதல் மண்டபம் அங்கு பேசும் இன்பமந்திரம்
கோடி மலரில் இவள் குமுதம்...தன னன
சுவைகூடும் நகையில் இவள் அமுதம்...தன னன னன
கோடி மலரில் இவள் குமுதம்...தன னன
சுவைகூடும் நகையில் இவள் அமுதம்...தன னன னன
கலசம் குலுங்கும் இளமயில் கவிஞன் மயங்கும்
கலைமயில் வீணைமேனிதனில் பின்குடங்கள் என
அசைந்து வரும் அணைக்க வரும் புது நிலவோ

கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத
குறுநகை அமைத்தது இலக்கிய மேடை
கருவிழி வரைந்தது மன்மத ஜாடை
கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத

2 இசை மழையில் நனைந்தவர்கள்:

கானா பிரபா said...

kalakkals :0

Unknown said...

80- களில் இளையராஜாவால் இரு இனிய இசை மலர்கள் அறிமுகமானார்கள். அதில் ஒருவர் ஜென்சி மற்றவர் SP.ஷைலஜா. இவர்கள் இருவரின் குரல்களில் வித்தியாசமான
ரசனை உண்டு.
ஜென்சி பாடிய............என் வானிலே ஒரே வெண்ணிலா .....................
ஷைலஜா பாடிய ....மலர்களில் ஆடும் இளமை புதுமையே ...................
இரண்டு பாடல்களும் வித்தியாசமான இனிமைதான் . இருவரின் குரல்களில் ஒரு குழைந்தை தனம் இருக்கும் .
இருவரும் சேர்ந்து பாடிய ... ஆயிரம் மலர்களே மலருங்கள் .............பாடலும் இனிமைதான்
இவ் ஆயிரம் மலர்களே மலருங்கள் பாடலில் ..............
ஆரம்ப ஹம்மிங் SP . ஷைலஜா ஹா ஹா ..........என்று பாட தொடர்ந்து ஜென்சி ஆயிரம் மலர்கள் ...........என்று பாட அழகாக இருக்கும் . தொடர்ந்து ஜென்சி ...வானில்லே வெண்ணிலா .................என்று பாடுவார் .அதை தொடர்ந்து அடுத்த சரணம் SP .ஷைலஜா
கோடையில் மழைவரும் வசந்த காலம் ....................என்று பாடி முடிப்பார் . இருவரின் குரல்களும் இரு வேறு இனிமை
80 - களில் வானொலியில் ஜென்சி , ஷைலஜா பாடல்கள் வலம் வந்ததை மறக்க முடியவில்லை. இப்பொழுது கேட்கும் பொழுது பசுமை . காலத்தால் அழியாத இரு இசை குரல்கள் ஜென்சி , SP.ஷைலஜா
சமீபத்தில் நண்பிகளான ஜென்சி யும் SP.ஷைலஜா வும் - "இரு பறவைகள் "