பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா


Get Your Own Hindi Songs Player at Music Plugin



பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா

வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா...

பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா




அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்.
தென்றல் என் வாசல் தீண்டவேயில்லை
கண்ணில் வெந்நீரை வார்த்தேன்.

கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம்
நீயும் நெய்யாக வந்தாய்

இந்தக் கண்ணீரில் சோகமில்லை
இன்று ஆனந்தம் தந்தாய்.
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்.
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா



காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே...
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே..

உன் முகம் பார்க்கிறேன்
அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்தப் பொன்மானைப் பார்த்துக்கொண்டே
சென்று நான் சேரவேண்டும்.

மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்.
பாச ராகங்கள் பாட வேண்டும்..
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா...

எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா

படம்: பூவே பூச்சூடவா.

இசை: இளையராஜா

பாடியவர்:கே.ஜே. யேசுதாஸ்



அனைவருக்கும் கானக்கந்தர்வன் வலைப்பூ சார்பில்
மகளீர் தின வாழ்த்துக்கள்

6 இசை மழையில் நனைந்தவர்கள்:

Anonymous said...

my fav....... :)

நட்புடன் ஜமால் said...

மிகவும் உணர்ந்து இரசிக்கும் பாடல் இது

நட்புடன் ஜமால் said...

\\அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்.\\

மிகவும் இரசித்தது ...

இப்போ எந்த போன் ஒலித்தாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன் ...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல பாடல்!

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பாடல்...நல்ல பகிர்வு..

நன்றி!!!!!

இது நம்ம ஆளு said...

அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.