Showing posts with label பாரதியார் பாடல்கள். Show all posts
Showing posts with label பாரதியார் பாடல்கள். Show all posts

மனதில் உறுதி வேண்டும்....வார்த்தையிலே தெளிவும் வேண்டும்

Get this widget | Track details | eSnips Social DNA



மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளி படைத்த பார்வை வேண்டும்
ஞான தீபம் ஏற்ற வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்.....

இடை வரும் பலவித தடைகளை தகர்த்திங்கு வாழ்ந்து காட்ட வேண்டும்
இலக்கிய பெண்ணுக்கு இலக்கணம் நீயென யாரும் போற்றவேண்டும்
மாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம்
மானம் காக்கும் மாந்தர் யாருக்கும் மாலை வாங்கி போடுவோம்
ஏசினாலும் பேசினாலும் அஞ்சிடாமல் வாழ வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்.....

சமைக்கின்ற கரமிங்கு சரித்திரம் படைப்பதை பூமி பார்க்க வேண்டும்
தூரத்து தேசத்தில் பாரத பெண்மையின் பாடு கேட்கவேண்டும்
பெண்கள் கூட்டம் பேய்கள் என்று சொன்ன சித்தர்களும்
ஈன்ற தாயும் பெண்மையென்று எண்ணிடாத பித்தர்களே
வீடு ஆளும் பெண்மையிங்கு நாடு ஆளும் காலம் வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்.....

படம்: மனதில் உறுதி வேண்டும் (1987)

பாரதியார் பாடலுக்கு இசை அமைத்தது இளையராஜா.

குரல் கொடுத்தது : கே.ஜே.யேசுதாஸ்

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா...!

Chinna Chiru Kiliye -

ஏழாவது மனிதன் திரைப்படத்தில் வரும் இந்தப் பாடல்
யேசுதாஸ், சுவர்ணலதா குரலில் கேட்டு மகிழலாம்.


சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே
பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே
அள்ளி அணைத்திடவே என் முன்னே
தேனே.. ஆடி வரும் தேனே...
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

உச்சிதனை முகர்ந்தால் கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி..
மேனி சிலிர்க்குதடி..

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி..
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி.
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்தம் ஆகுதடி (உன்னைத் )

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

பாயுமொளி நீயெனக்கு பார்க்கும் விழி நானுனக்கு




பாயுமொளி நீயெனக்கு
பார்க்கும்விழி நானுனக்கு
தோயும் மது நீயெனக்கு
தும்பியடி நானுனக்கு
வாயுரைக்க வருகுதில்லை
வாழி நின்றன் மேன்மையெல்லாம்
தூய சுடர் வானொளியே
சுரையமுதே கண்ணம்மா.....

வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு
வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீயெனக்கு
புது வயிரம் நானுனக்கு

வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீயெனக்கு
புது வயிரம் நானுனக்கு

வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு

வானமழை நீயெனக்கு
வண்ண மயில் நானுனக்கு
ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ
வானமழை நீயெனக்கு
வண்ண மயில் நானுனக்கு
பானமடி நீயெனக்கு
பாண்டமடி நானுனக்கு
கான ஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதி முகம்
ஊனமறு நல்லழகே
நல்லழகே
ஊறுசுவையே கண்ணம்மா....


காதலடி நீயெனக்கு
காந்தமடி நானுனக்கு
வேதமடி நீயெனக்கு
வித்தையடி நானுனக்கு
போதமுற்றபோதினிலே பொங்கி வரும் தீஞ்சுவையே
நாதவடிவானவளே
நாதவடிவானவளே... நல்ல உயிரே... கண்ணம்மா.

வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு


படம்: ஏழாவது மனிதன்(1982)
பாடல் வரிகள்: பாரதியார்
இசை: எல்.வைத்தியநாதன்.

ஓடி விளையாடு பாப்பா.

மகாகவி பாரதியாரின் அருமையானப் பாடல்.
ஏழாவது மனிதன் திரைப்படத்தில் யேசுதாஸின்
இனிமையான குரலில் கேட்டு மகிழுங்கள்.




ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வைய்யாதே பாப்பா.


ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வைய்யாதே பாப்பா.


காலை எழுந்ததும் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு
என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா


சின்னஞ்சிறு குருவி போலே
நீ திரிந்து பறந்து வா பாப்பா
வண்ண பறவைகளைக்கண்டு நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வைய்யாதே பாப்பா.



படம்: ஏழாவது மனிதன் (1982)
இசை:எல். வைத்தியநாதன்
பாடல் வரிகள்: மகாகவி சுப்ரமணிய பாரதியார்.

9. காக்கைச் சிறகினிலே நந்தலாலா....!

Get this widget Track details eSnips Social DNA


படம்: ஏழாவது மனிதன்
பாடியவர்:K.J.ஜேசுதாஸ்
இசை: L. வைத்தியநாதன்
இயக்கம்:K.ஹரிகரண்
வருடம்:1982

காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா

(காக்கைச் சிறகினிலே)

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

(காக்கைச் சிறகினிலே)

கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா

(காக்கைச் சிறகினிலே)

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

(காக்கைச் சிறகினிலே)