Showing posts with label கத்தோலிக்க கீதங்கள். Show all posts
Showing posts with label கத்தோலிக்க கீதங்கள். Show all posts

18.குழலும் யாழும் குரலினில் தொனிக்க கும்பிடும் வேளையிலே...



திருச்சி வானொலியில் காலை 6 மணி பக்திமாலை
நிகழ்ச்சியில் இந்தப் பாடலை கேட்டிருப்பீர்கள்.

ஆரோக்கியமாதாவைப்பற்றிய அந்தப்பாடல் இதோ.


Get this widget | Track details | eSnips Social DNA



குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே...

குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!

குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!

******************
அருளே நிறைந்த மரியே என்று
அன்புடன் அழைக்கயிலே....
அருளே நிறைந்த மரியே என்று
அன்புடன் அழைக்கயிலே.

இருளே நீங்க இறைவனை ஏந்தி
இன்னருள் தருவாளே- மாதா
இன்னருள் தருவாளே.

குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!
*****************

ஜபமே செய்து தவமே புரிந்து
ஜெபிக்கும் வேளையிலே...
ஜபமே செய்து தவமே புரிந்து
ஜெபிக்கும் வேளையிலே

ஜயமே தருவாள் பயமே வேண்டாம்
ஜகத்தின் இராக்கினியே- இந்த
ஜகத்தின் இராக்கினியே.

குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!

****************

வேளாங்கன்னி மாதா அருளை
வியந்து போற்றுவோமே!
நாளும் பொழுதும் நாயகி அவளை
நயந்து வாழ்த்துவோமே-என்றும்
நயந்து வாழ்த்துவோமே

குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!