சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி


Get Your Own Hindi Songs Player at Music Plugin

சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

மோகனப் புன்னகையில் ஓர்நாள்
மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர்
தத்துவம் சொல்லி வைத்தான்.
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர்
ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்

கள்ளத்தனம் என்னடி
எனக்கோர் காவியம் சொல்லு என்றான்

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்.
பள்ளித்தளம் வரையில் செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது
கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே செல்லம்மா ......

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

படம்: மீண்டும் கோகிலா.
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ் , எஸ்.பி. ஷைலஜா
இசை: இளையராஜா.
வரிகள்: கண்ணதாசன்.

நதிக்கரை ஓரத்து நானல்களே



ரொம்ப வருடங்கள் கழித்து தாஸ்ண்ணா, எஸ்.பி.சைலஜா கூட்டணியில் வெளிவந்த இந்த பாடல் கேட்பதற்க்கு மிகவும் ரசிக்கும் படி உள்ளது. தாஸண்ணாவின் பேஸ் குரலும் சைலஜா மேடத்தின் கீச் குரலும் என்னவொரு கான்ட்ராஸ்ட் காம்பினேசன். வித்தியாசமா இனிமையாகத்தான் இருக்கிறது.கேட்டு மகிழுங்கள்

நதிக்கரை ஓரத்து நானல்களே
படம்:காதல் கிளிகள்

Get this widget | Track details | eSnips Social DNA


நதிக்கரை ஓரத்து நானல்களே
என் நாயகன் புகழை கேளூங்களே
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களே

நதிக்கரை ஓரத்து நானல்களே
என் நாயகி அழகை பாடுங்களே
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களே

நதிக்கரை ஓரத்து நானல்களே

என் நாயகி அழகை பாடுங்களே

தரையை தொடாத தென்றலைப் போல்
உன் தாமரை பாதங்கள் நடப்பதென்ன

கல்யாண செய்தியை கேட்டவுடன்
என் கால்கள் தொடவில்லையே

கரையை தொடாத அலைகளைப்போல்
உன் கரும்கூந்தல்?? கைகளில் விழுவதென்ன

காதலன் கைகளில் சுகம் பெறவே
என் தோள்கள் சரிந்து விழுந்ததய்யா

நதிக்கரை ஓரத்து நானல்களே

என் நாயகன் புகழை கேளூங்களே

கங்கையின் சங்கமம் கடலிடத்தில்
எந்தன் கன்னியின் சங்கமம் என்னிடத்தில்

ஜென்மம் பூமியில் விழும் போதே
என் சிந்தை கலந்தது உன்னிடத்தில்

உதடுகளாலே கதை எழுதி
உள்ளத்தை மயக்கிட நான் வரவா

மாலையும் கையும்?? வரும் வரைக்கும்
உன் மனதை மடக்க முடியாதா

நதிக்கரை ஓரத்து நானல்களே
என் நாயகி அழகை பாடுங்களே

காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களே